20 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முடிப்பது கங்கையுந் திங்களுஞ்
செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ
ழக்கணை நூறினார்
கடிப்பதும் ஏறுமென் றஞ்சு
வன்திருக் கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லை
யோஎம் பிரானுக்கே.

               -சுந்தரர்  (7-44-1)


பொருள்: சிவபெருமான்  சூடுவது கங்கையையும் சந்திரனையும் , அழித்தது மூன்று மதில்களை , அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார் . தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு . அது கடித்தவுடன் , நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன் ; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ !

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...