29 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 

                 -மாணிக்கவாசகர்  (8-47-3)


பொருள்: திருப்பெருந்துறை இறைவன் தன் வேலை என் மனத்துக் கோத்தான்; இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைதொழுது உய்யும் வகையின் நிலையையும் அறிந்திலேன்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...