28 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேயன தோளி மலைம
களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட
னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள்
அல்ல லறுக்கினும்
பேயனே பித்தனே என்ப
ரால்எம் பிரானையே.

              -சுந்தரர்  (7-44-5)


பொருள்: மூங்கில் போன்ற  தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற , வஞ்சனை இல்லாத , பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை , தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும் , அவனைச் சிலர் ` அவன் பேயோடாடுபவன் ; பித்துக் கொண்டவன் ` என்று இகழ்வர்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...