13 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொண்டர்காள் தூசிசெல்லீர்
பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்டிறல் யோகிகளே
பேரணி உந்தீர்கள்
திண்டிறல் சித்தர்களே
கடைக்கூழை சென்மின்கள்
அண்டர்நா டாள்வோம்நாம்
அல்லற்படை வாராமே. 

             -மாணிக்கவாசகர்  (8-46-2)


பொருள்: தொண்டர்களே! நீங்கள் முன்னணியாய்ச் செல்லுங்கள்! பத்தர்களே! நீங்கள் சூழ்ந்து செல்லுங்கள்! யோகிகளே! நீங்கள் பெரிய அணியைச் செலுத்துங்கள்! சித்தர்களே, நீங்கள், பின்னணியாய்ச் செல்லுங்கள்! இப்படிச் செய்வீர்களாயின் நாம் தேவர் உலகத்தை ஆளலாம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...