23 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வையம் முறைசெய் குவனாகில்
வயங்கு நீறே
செய்யும் அபிடே கமுமாக
செழுங்க லன்கள்
ஐயன் அடையா ளமுமாக
அணிந்து தாங்கும்
மொய்புன் சடைமா முடியேமுடி
யாவ தென்றார்.

                -மூர்த்தி நாயனார்  (41)


பொருள்: நான்  அரசு செய்யவேண்டும்  எனில், பெருமானின் திருமேனியில் விளங்கும் திருநீறே எனக்குச் செய்யும் திருமுழுக்கு  ஆகவும், சிவபெருமானின் அடையாள மாய உருத்திராக்கமாலையே எனக்குச் சிறந்த அணிகலன்கள் ஆகவும், இறைவனின் சிறப்புடைய திருச்சடைமுடியே அணியும் திருவுடைய முடியாகவும், அமையத் தக்கன` என்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...