15 March 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.

               - மூர்த்தி  நாயனார்  (39)


பொருள்: மங்கலச் செயல் புரியும் மாந்தர்களை , நோக்கி, சிந்தையில் சிவமே நிலவுகின்ற திருவுடைய அரசர் பெருமானாய மூர்த்தியார், `இதற்குமுன் இங்கு இருந்த சமணக் கொள்கை மறைந்து, எவற்றிற்கும் முதற் பொருளாய சிவபெருமானை அடைதற்குரிய சைவம் ஓங்குவதாயின், இவ்வுலகை ஏற்றுத் தாங்கி இவ்வினிய அரசினை ஆள்வேன்,` என்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...