31 March 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாதம்பர மன்னவர் சூழ்ந்து
பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை இவ்வுல
காண்டு தொண்டின்
பேதம்புரி யாஅருட் பேரர
சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணினர்
அண்ண லாரே.

               -மூர்த்திய நாயனார்  (48) 


பொருள்: தம்முடைய திருவடிகளை வேற்று நாட்டு அரசர் களும் பணிந்து போற்றிட, இவ்வுலகினைத் துயரம் பற்றாத வகையில் நன்னெறியில் ஆண்டு, திருத்தொண்டினின்றும் மாறிலாத வகையில் அருளரசாகவும் இருந்து, பின்னர்த் தலைவரான சிவபெருமானின் சேவடிகளை அடைந்தனர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...