07 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத்
தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட்
கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ.

               - மாணிக்கவாசகர் (8-11-10)

 

பொருள்: கனவிலும் காண்பதற்கு அரிதாகிய திருவடியையுடைய இறைவன் உமாதேவியாரோடும் எழுந்தருளி நனவின் கண்ணே என்னை வலிந்து ஆட்கொண்ட விதத்தை மனத் தால் சிந்தித்து கண்களில் நீர் மல்க  தெள்ளேணம் கொட்டுவோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...