25 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தோள்கொண்ட வல்லாண்மைச்
சுற்றத் தொடுந்துணையாம்
கோள்கொண்ட போர்மள்ளர்
கூட்டத் தொடும்சென்று
வாள்கொண்ட தாயம்
வலியாரே கொள்வதென
மூள்கின்ற செற்றத்தால்
முன்கடையில் நின்றழைத்தான்.
 
                      - ஏனாதி  நாயனார்  புரணாம் (9)

 

 பொருள்: தோளின் வலிய ஆண்மை கொண்ட சுற்றத் தாருடனே, தனக்குத் துணைவலியாகக் கொள்ளப்பட்ட போர் வீரர் களின் கூட்டத்தோடு சென்று, ஏனாதிநாதரின் வீட்டின் முன்னே நின்று, வாள் பயிற்றும் தொழில் உரிமையை நம்மில் வலியவராய் உள்ளவரே கொள்ளத் தக்கவர், என மிகவும் மூண்டு எழும் சினத்தால் போருக்கு அழைத்தான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...