03 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேழக் கரும்பினொடு
மென்கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி
தானோங்குந் தன்மையவாய்
வாழக் குடிதழைத்து
மன்னியஅப் பொற்பதியில்
ஈழக் குலச்சான்றார்
ஏனாதி நாதனார்.
 
                      -ஏனாதி நாயனார் புராணம் (2)

 

பொருள்: வேழக் கரும்புகளோடு மெல்லிய கரும்புகளும் குளிர்ந்த வயல்களிடத்துத் தம் வளர்ச்சியில் தாழும்படி, கதிர்களை யுடைய செந்நெற்பயிர்கள் உயரும் தன்மை உடையவாய், அவற்றால் வாழ்வுபெறுகின்ற குடிமக்கள் ஓங்கி நிலைபெற்றிருக்கின்ற அவ் வழகிய எயினனூரில் வாழ்பவர் ஏனாதிநாதர் ஆவர். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...