13 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாளின் படைபயிற்றி
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால்
நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும்
காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
 
                 - ஏனாதி நாயனார் புரணாம் (4)

 

பொருள்: வாட்படை பயிற்றும் தொழிலில் வந்த பொருள் வருவாய் அனைத்தையும், பெருமை பொருந்திய திருமுடியையும் திருவடியையும் காண இயலாத மால் அயன் ஆகிய இருவரையும் தொண்டாளும் சிவபெருமானின் அடியவர்களுக்கு, நாளும் தம் உள்ளத்து எழும் பேரன்பினால் பொருந்தி, கொடை மிகுதியால் கொடுத்துவரும் கடப்பாடுடையவர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...