19 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புத்தன் புரந்தராதியர்
அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை
மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை
அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                       - மாணிக்கவாசகர் (8-11-16)
 
பொருள்: புதுமையானவனும், இந்திராதியர் வணங்கும் படியாகிய பித்தனும், திருப்பெருந்துறையை உடையவனும், எமது பிறவியை ஒழித்தருளின அத்தனும், தில்லையம்பலத்தை உடையவனு மாகிய சிவபெருமானது அருவுருவமாகிய திருவடிகள் என் மனத்தில் தங்கியிருக்கும் விதத்தைப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டு வோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...