29 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ.
 
                     - திருநாவுக்கரசர் (4-12-5)

 

பொருள் : இந்த மண்ணுலகில் பொருந்தி வீட்டின்பமே இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும்,  தூய்மையை உடைய மறையவர்களுக்கும்,  வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும், வீடு இன்பப் பேறுமாய் நிற்பவனாய், பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் அப்பனை  உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் நான் கைவிடக் கூடியவனோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...