16 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே

      - திருஞானசம்பந்தர் (1-13-5)

பொருள் :  நமது எண்ணதின் (தியானத்தின்) பயனாய் இருப்பவனும், நான்முகனாய் உலகைப் படைப்போனும், இசையோடு கூடிய மறைகளாய்  விளங்குவோனும், மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும், எல்லோர்க்கும் தலைவனானவனும், கண்ணிறைந்த அழகு  ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...