19 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

        - திருநாவுக்கரசர் (4-11-8)

பொருள்:  நம் வீட்டில் ஏற்றும் விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்கும். சொல்லின் உளளே  நின்று விளக்குவதாய் , ஒளியுடையதாய் , பல இடங்களிலும்  காண நிற்பதாய், ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை தருவது  திருவைந்தெழுத்து மந்திரமே .

இப்பாடல் நாம் தினசரி வீட்டில் விளக்கு ஏற்றும் போழுது பாடவேண்டியப்பாட்டாகும்.   

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...