27 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்

            - சேக்கிழார் (12-3-2)

பொருள்: உலகியற் பொருள்களில் பற்று வைக்காமல் , நிலையுடைய அறத்தில்  பற்று வைத்து வாழ் பவர். கங்கையை சடையில்  உடைய சிவபெருமானிடத்து அன்புடையவர். உண்மையான அடியவர்களுக்கு  தொண்டு களைச் செய்து வரும் விருப்புடையவர். உலகினரால் போற்றப்பெறும் இல்லறத்தை ஏற்று ஒழுகுபவர். சைவத்தின் உண்மைப் பொருளாக விளங்குகின்ற சிவபரம்பொருளைச் நினைத்தே வாழ்பவர். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...