23 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.

                  - திருமூலர் (10-36)

பொருள்:  திருமூலன் பாடிய இந்த மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்திபெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. இதனை  நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர் என்பது திண்ணம்.
இதன் மூலம் திருமூலர் மூவாயிரம் பாடல்கள் தான் இயற்றினார் என்பது நன்கு
பெறப்படும். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...