07 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திலகவதி யார்பிறந்து
சிலமுறையாண் டகன்றதற்பின்
அலகில்கலைத் துறைதழைப்ப
அருந்தவத்தோர் நெறிவாழ
உலகில்வரும் இருள்நீக்கி
ஒளிவிளங்கு கதிர்போல்பின்
மலருமருள் நீக்கியார்
வந்தவதா ரஞ்செய்தார்.

            -திருநாவுக்கரசர் புராணம்  (18)


பொருள்: திலகவதியார் பிறந்தபின், முறையாகச் சில ஆண்டுகள் கழிந்த பின்பு, அளவில்லாத கலைகளின் துறைகள் தழைக்கவும், அரியதவத்தவர் நெறி வாழவும், உலகில் புற இருளை நீக்கி வருகின்ற ஒளியுடைய ஞாயிற்றைப் போலப் பின்னர் அக இருளை நீக்கி மலர்விக்கும் `மருள்நீக்கியார்` தோன்றி அருளினார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...