04 May 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

                   -திருமூலர்  (10-2-25,1)


பொருள்: கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்,  கற்றவரே வல்லவராவர் என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...