17 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆண்டகைமைத் தொழிலின்கண்
அடலரியே றெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற்
கலிப்பகையார் எனும்பெயரார்
பூண்டகொடைப் புகழனார்
பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுங் காதலினால்
மேலோரைச் செலவிட்டார்.

             -திருநாவுக்கரசர் புராணம்  (23)


பொருள்: வீரம் மிக்க போர்த் தொழிலில் வலிய ஆண் சிங்கத்தைப் போன்றவரும், காண்டற்கினிய தக்க பேரழகுடையவரும், ஆன கலிப்பகையார், கொடைத்தன்மை பூண்ட புகழனாரிடம் அவரு டைய ஒப்பில்லாத மகளாரைத் தாம் மணமகனாராகக் கொள்ளும் பொருட்டு விரும்பி எழும் காதலால் உரிய பெரியோர்களை அனுப்பினார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...