03 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.

              -திருக்கோவையார்  (8-13,1)


பொருள்: ஒரு கரிய பொழில்; புறமெங்குங் கதிரோன் றான்சென்று நுழையாதவிருளாய்; நடுவண் வளவிய வான் மீன்போலத் தேன்கள் நுழையும் நாகப்பூ மலர்ந்து; திகழும் பளிங்கால்;  திங்கட்கடவுள் வானிடத்து வாழ்வையொழிந்து கானிடத்து வாழ்தலைப் பெற்றாற்போலத் தனதெழிலைப் புலப்படுத்தும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...