15 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.

            -திருக்கோவையார்  (8-13,7)


பொருள்: நீ அளிகள் விடாது தங்கு மளகத்தின்கண் இட்டதாதும்; அணிந்தவணிகளும்; ஒளியையுடைய நீண்ட சுரிகுழல் இடத்துச் சுற்றிய நல்லமாலையும் இவையெல்லாம்; நின்னோடொருதன்மையளாகிய நின்றோழி யாராய்ந்து செய்யுங் கோலமே; திருநுதலாய்; யான்பிறிதோர் கோலஞ் செய்தேனென்று கலங்க வேண்டா;  தெளிவாயாக

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...