24 May 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


விசும்பினுக் கேணி நெறியன்ன
சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.

             -திருக்கோவையார்  (8-14,2) 


பொருள்: விசும்பிற் கிட்டதோ ரேணிநெறி போலுஞ் சிறுநெறிமேல்; மழை யிடையறாது நிற்றலான் இடையிடையுண்டாகிய அசும்பின்கட் சென்று பொருந்தி யேறுமிடத்து இட்டிமையால் அளை நுழைந்தாற் போன்றிருக்கும்; அதுவேயுமன்றி, எம் வாழ்பதி வழுக்கினான் மெய்யே சிந்தைக்குமேறுதற்கரிது; அதனாலாண்டுவரத்தகாது

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...