22 May 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கரையுங் கடலும் மலையுங்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க் கெல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

              -சுந்தரர்  (7-73-1)


பொருள்:  நிலம் , கடல் , மலை முதலாய எவ் விடத்திலும் , காலை , மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்தி வருபவனும் , ஒப்பற்றவனும் , உருத்திர லோகத்தை உடைய வனும் , மலையின் இளமையான மகளுக்குக் கணவனும் , தேவர் , அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் , இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? என்று கேட்டறிமின் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...