06 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோ ழந்தேவர்
விண்ணிற்பொலிய வமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம் பதியாக
எண்ணிற்சிறந்த விமையோரேத்த வுமையோ டிருந்தானே.
 
                                  -திருஞானசம்பந்தர்  (1-74-7)


பொருள்: அரிய நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...