05 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முன்னவரை நேர்நோக்கி
முக்கண்ணர் மூவுலகும்
நின்னிலைமை அறிவித்தோம்
நீயும்இனி நீடியநம்
மன்னுலகு பிரியாது
வைகுவாய் எனஅருளி
அந்நிலையே எழுந்தருளி
அணிஏகாம் பரம்அணைந்தார்.


                  -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (127)


பொருள்: தம்முன்பு நின்ற அடியவரை முக்கண்களை யுடைய இறைவன், `மூவுலகும் உனது அன்பின் நிலையை அறியுமாறு அறிவித்தோம், நீயும் இனி நீடிய வாழ்வுடைய நம் பேருலகை வந்த டைந்து எம்முடன் பிரியாது இருந்திடுவாய் என அருள் புரிந்து, அந் நிலையே தாம் எழுந்து மறைந்தருளி, அழகுடைய ஏகாம்பரம் என்னும் திருக்கோவிலைச் சென்று சேர்ந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...