13 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை
பொன்னின் மயமாக் கியவளவர்
போரே றென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன்
வருந்தொல் மரபின் முடிசூட்டுந்
தன்மை நிலவு பதிஐந்தின்
ஒன்றாய் விளங்குந் தகைத்தவ்வூர்.


           - சண்டேசுவரநாயனார் புராணம் (8)


பொருள்: சோழ மரபில் அபயன் என்றும், குலோத்துங்க சோழன் என்றும் போற்றப்பெற்றவரும், தில்லையில் கூத்தப் பெருமான் வீற்றி ருந்தருளும் பேரவையைப் பொன்னின் மயமாகப் புனைவித்த வரும், இந்நிலவுலகைக் காத்துவரும் போரேறாய மன்னர் மன்னனும் ஆன அநபாயரின் மரபினர் வழிவழியாக முடி சூடற்குப் பொருந்திய ஐந்து பதிகளுள் ஒன்றாய் விளங்குவது திருசேய்ழலூர்  ஆகும் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...