11 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இரத முடைய நடமாட்
டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே.

             -திருக்கோவையார் (8-4,8) 


பொருள்: இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் இனிமையையுடைய கூத்தாட்டையுடையவர்; எம் உடையர் எம்முடைய தலைவர்; வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இப் புனத்தார் விருந்தொடு பேச்சின்மை விரதம் உடையர் அவரது வரதமுடைய அழகிய தில்லையையொப்பாராகிய இப்புனத்துநின்ற இவர்கள் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு பேசாமையை விரதமாகவுடையர்; அது அன்றேல் அதுவன்றாயின்; மீட்டு வாய்திறக்கின் சலக்கு என்ப மணி சரதம் உடையர் பின் வாய்திறக்கிற் சலக்கென விழுவன முத்தமணிகளை மெய்யாகவுடையர்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...