01 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குவளைக் கருங்கட் கொடியே
ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே.

                    -திருக்கோவையார்  (8-4,2) 


பொருள்: குவளை கருங் கண் கொடி ஏர் இடை இக் கொடி கடைக்கண் குவளைப்பூப்போலுங் கரியகண்ணினையுங் கொடியை யொத்த இடையினையுமுடைய இக்கொடியினது கடைக்கண்; உவளைத் தன்னுடைய வுயிரென்று சொல்லிற்று, அதனால்; தன்னோடு உவமை இல்லாதவளைத் தன் பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் துவளத் தலைவந்த இன்னல் தனக்கொப்பில்லாதவளைத் தன்னொருகூற்றின்கண் வைத்த சிற்றம்பலத்தானது

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...