26 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை யடிமுடி யறியா வண்ணம்
செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

                      -திருநாவுக்கரசர்  (4-73-8)


பொருள்:  முன்னர்  இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன் , திருமாலோடு , எங்கள் ஒப்பற்ற தலைவனே !` என்று வணங்கித் துதிக்க ,  எல்லை யில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப் பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கியவர்  சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆவர் 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...