06 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே.

                   -திருஞானசம்பந்தர்  (1-71-11)


பொருள்: குயில்கள் வாழும் அழகிய மாதவிகளும், குளிர்ந்த அழகிய சுரபுன்னைகளும் வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவரை மயில்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பயில்பவர்க்கு இனியவாய்ப் போற்றிப்பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...