25 October 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


பொன்னிமயப் பொருப்பரையன்
பயந்தருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்றளக்க
எழுந்தருளும் நம்பெருமான்
தன்னுடைய அடியவர்தம்
தனித்தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டன்பர்க்
கருள்புரிவான் வந்தணைவார்.

                          -திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்  (115)


பொருள்: பொன் போல் விளங்கிடும் இமயமலை அரசரின் திருமகளாராய பூங்கொடி போன்ற உமையம்மையாரது தவநிலையை உலகவர் அறிய எழுந்தருளிவந்த பெருமான், தன்னுடைய அடியவர் களின் தனித்தொண்டரான திருக்குறிப்புத்தொண்டரின் அன்புமிகுந்த நிலையினைக் கண்டு, அவ்வன்பருக்கு அருள் புரிந்திட வேண்டி வந் தணைந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...