03 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாயும் விடையரன் றில்லையன்
னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.

                 -திருக்கோவையார்  (8-1,3) 


பொருள்:பாயும் விடை அரன் தில்லை அன்னாள் பாய்ந்து செல்லும் விடையையுடைய அரனது தில்லையை யொப்பாளுடைய; படைகண் இமைக்கும் படைபோலுங் கண்கள் இமையா நின்றன; நிலத்து அடி தோயும் நிலத்தின் கண் அடி தீண்டா நின்றன; தூமலர் வாடும் தூய மலர்கள் வாடா நின்றன, ஆதலின் துயரம் எய்தி ஆயும் மனனே துயரத்தையெய்தி ஆராயும் மனனே ; அம் மாமுலை சுமந்து அழகிய பெரியவாகிய முலைகளைச் சுமந்து; தேயும் மருங்குல் தேயாநின்ற மருங்குலையும்; பணை பெருந்தோள் பணைபோலும் பெரிய தோள்களையும் உடைய; இச்சிறு நுதல் அணங்கு அல்லள் இச்சிறு நுதல் தெய்வம் அல்லள்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...