10 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

                - சுந்தரர் (7-67-5)


பொருள்: சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும் , திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த , தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய , முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும் , அடியேனது அறியாமையை அறிந்து , கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி , கழல் அணிந்த தனது திருவடியைப் பெறுவித்து , எனது குற்றங்களை எல்லாம் அறுத்த வன்மையையுடைய , தேவர் பலரும் வணங்க நிற்கின்ற பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...