16 October 2017

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


அவ்வகைய திருநகரம்
அதன்கண்ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால்
ஏகாலிக் குலத்துள்ளார்
செவ்வியஅன் புடைமனத்தார்
சீலத்தின் நெறிநின்றார்
மைவிரவு கண்டரடி
வழித்தொண்டர் உளரானார்.


                  -திருகுறிப்புத்தொண்டர்  நாயனார்  (111)


பொருள்: அவ்வகையான திருவுடைய காஞ்சி நகரின் ஒரு புறமாக வாழ்பவர், இவ்வுலகத்தில் பிறப்பினால் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர், செப்பமாய அன்புடைய மனமுடையவர், சிவ பெருமானை உளங்கொண்ட சீலமுடையவர், கருமை பொருந்திய கழுத்தினையுடைய சிவபெருமானின் திருவடிகளில் வழிவழியாகத் தொண்டு செய்து வரும் வழியடிமைத் தொண்டராக வாழ்பவர் ஒருவர் உளரானார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...