26 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாணாரமணர் நல்லதறியார் நாளுங் குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசே லவரோடும்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோ ணத்தாரே.

                             -திருஞானசம்பந்தர்  (1-72-10)


பொருள்: சமணர்கள் நாணம் இல்லாதவர்கள். நல்லதை அறி யாதவர்கள். நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்களோடு பேசவும் செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத் தோயும் மாடவீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச் சென்று வழிபடுவீர்களாக.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...