11 October 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


உயிரொன் றுளமுமொன் றொன்றே
சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
லாகும் பணிமொழிக்கே.

            - திருக்கோவையார் (8-1,18)


பொருள்: என்னொடு இவட்கு உயிர் ஒன்று உளமும் ஒன்று சிறப்பு ஒன்று என்ன என்னோடு இவட்கு உயிருமொன்று மனமுமொன்று குரவர்களாற் செய்யப்படுஞ் சிறப்புக்களும் ஒன்றென்று சொல்லி; பணி மொழிக்கு தாழ்ந்த மொழியை உடையாட்கு; செவி உற நீள் படை கண்கள் சென்று பயில்கின்ற செவியுறும் வண்ணம் நீண்ட படைபோலும் கண்கள் இவள்கட் சென்று பயிலாநின்றன; அதனால் இவள் போலுமிவட்குச் சிறந்தாள் என்றவாறு.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...