30 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே.
 
                    -சுந்தரர் (7-32-10)

 

பொருள்: உலகில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தெற்கு திசையில்  , அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர் , சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களேயாவர் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...