01 July 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

ஆலலா லிருக்கை யில்லை யருந்தவ முனிவர்க் கன்று
நூலலா னொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலா லமுத மில்லை யையனை யாற னார்க்கே.
 
                        -திருநாவுக்கரசர்  (4-40-2)

 

பொருள்:  கல்லால மரத்தைத் தவிர வேற்றிடம் எம்பிரானுக்கு  அமைவதில்லை .  தவத்தையுடைய   முனிவர்களுக்கு அப்பிரானார் நுண்பொருளாய்வு செய்து வேதாகமப் பொருள்களைத் தவிர வேற்றுப் பொருள்களை உபதேசிப்பதில்லை . திருமாலும் பிரமனும் கூடித் தம் மலர்போன்ற திருவடிகளை வணங்க அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கித் தாம் உட்கொண்ட கடல் விடத்தைத் தவிர உணவு வேறு இல்லை  எம்பிரான் ஐயன் ஐயாறனார்க்குக்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...