13 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்றிரவு கனவின்கண்
அருள்முனிவர் தம்பாலே
மின்திகழுஞ் சடைமவுலி
வேதியர்தா மெழுந்தருளி
வன்திறல்வே டுவன்என்று
மற்றவனை நீநினையேல்
நன்றவன்தன் செயல்தன்னை
நாமுரைப்பக் கேள்என்று.

                   -கண்ணப்பதேவநாயனார்  (156)

 

பொருள்: அன்று இரவு, அரிய அம்முனிவரிடத்து, திகழும் சடைமுடியையுடைய இறைவன் கனவில் எழுந்தருளி, வலிமை பொருந்திய வேடுவன் இது செய்தவன் என அவனை நீ எண்ணாதே! நலம் மிக்க அவன் தன் செயலை நான் கூறக் கேட்பாயாக என மொழிந்தருளிப் பின்னரும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...