02 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே.
 
                 -சுந்தரர்  (7-32-1)

 

 பொருள் கடற்காற்றுக் கடுமையை  வந்து வீச , இக் கடற்கரையின்மேல் , உமக்கு , யார் துணையாய் இருக்க இருக்கின்றீர் ? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன ; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ கோடிக்குழகரே !!!!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...