03 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நிலம்நீர் நெருப்புயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ
டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகே ழெனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா
தோணோக்க மாடாமோ.
 
                        -மாணிக்கவாசகர்  (8-15-5)

 

பொருள்:  நிலம், நீர்,  தீயும், வாயுவும், பெரிய ஆகாயமும், சந்திரனும் சூரியனும், அறிவுருவாய ஆன்மாவும் என்னும் எட்டு வகைப் பொருள்களாய் அவற்றோடு கலந்து இருப்பவனாய் ஏழுலகங்களும் திக்குகள் பத்து ஆனாலும்  ஒன்றான  இறைவனை  , பல பொருள்களாக நின்ற வகையைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...