17 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உரைமாண்ட உள்ளொளி
உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோணோக்க மாடாமோ.
 
                      -மாணிக்கவாசகர்  (8-15-14)

 

பொருள்: சொற்கள் தம் ஆற்றல் அடங்குதற்குக் காரணமான உள்ளொளியாகிய உத்தமனாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் மனத்தில் புகுதலும் கரையற்ற ஆசையாகிய பெரிய கடலைத் தாண்டுதலும் தமக்கு உணவு அற்ற இந்திரியங்களாகிய பறவைகள் அஞ்சி ஓட, நமது தன் முனைப்புக் கெட்ட விதத்தைப் பாடி தோணோக்கம் ஆடுவோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...