04 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.

                  - காரைகாலம்மையார் (11-4-74)

பொருள்:  கபாலம், பிரமன் தலையேயாயினும் இறைவன் கையில் இருத்தலால் எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பவில்லை. இறை வனை அடைந்த பொருள்களும் அவனைப் போலவே அளவுக்குள் அடங்காமல் நிற்கும்.  

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...