26 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

                  - திருமூலர் (10-1-50)



பொருள்: சிவன், சதாசிவன், மகேசுரன் என்று  மூன்றாகவும், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்று  ஐந்தாகவும் சொல்லப்படுகின்றார் . சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன் என்று  ஒன்பதாகவும்  சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...