27 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

              - காரைகாலம்மையார் (11-4-81)

பொருள்: அழகு மதில் உடைய  முப்புரம் அவிந்து அழிய அம்பு எய்திய சிவபெருமான் திருவடியாகிய தாமரை மலர்கள் சார்ந்தமையால், காலனையும், நரகங்களையும், இரு வினைகளையும் நீங்கபெற்றோம். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...