21 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
 
              - சுந்தரர் (7-17-1)

 

பொருள்: ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் எரித்தவரும் ,   என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு ,  திருமால் , பிரமன் , இந்திரன்  என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது திருநாவலூரே யாகும் .
 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...