05 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தா ரிலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்து மாயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
 
           - திருநாவுக்கரசர் (4-16-10)

 

பொருள்: கழுத்துக் கறுத்து நீலகண்டர், தம்  கால் விரலை ஊன்றி இராவணனுடைய பத்துத் தலைகளையும் செயலற்றவை ஆக்கினார் . ஐம்புல நுகர்ச்சியையும் துறந்தவர் . பார்வதியைப் பாகமாகக் கொண்டவர் எம் புகலூர்ப் புரிசடையாரே. 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...