03 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாம்இன் னடிசில் தகவுற
அமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென.

                - இளையான்குடிமாற நாயனார் புராணம் (11)

 

பொருள்: நம் வீட்டில் நமக்கு முன்னமேயே உணவின்றி வறுமையாக இருப்பினும், மாதை ஒரு கூற்றில் உடைய சிவபெருமானுக்குத் தொண்ட ராகிய இவ்வடியவருக்கு நாம் ஊட்டுதற்குரிய இனிய திருவமுதைத் அமைக்கும் வகை எவ்வாறு? என்று வினவவினார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...