02 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

         - காரைகாலம்மையார் (11-4-16)

பொருள்: எம்பெருமான் அருள் பெற்ற நமக்கு, இனி ஓர் இடர் இல்லை, இனிமேல் மீண்டும் ஒரு வினைக்கடலை உருவாக்கும் பிறவியென்னும் பிறப்பு நமக்கு கிடையாது.    

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...